Tuesday 15 July 2014

இரும்பு மனிதர் காமராஜர்.Kamaraj the Iron man (பகுதி-1)


(தலைவர்களிடையே ஒரு தொண்டனாய், தொண்டர்களிடையே நல்வழி காட்டும் ஒரு தலைவனாய் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி இன்றய தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக எனது முயற்சி.)

இரும்பு மனிதர் காமராஜர்.
                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(பகுதி-1.)

    ஒருதலைவர் குறித்து அறியும் முன்னர் அவர் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தை அறிந்து கொண்டால் அவரது வளர்ச்சியின் பரிணாமத்தை அறிவது இலகுவாகும். அவ்வகையில் காமராஜர் அவர்கள் தோன்றிய காலம் எப்படிப்பட்டதாக இருந்தது  என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

அக்காலச் சூழல்கள்-
~~~~~~~~~~~~~~~~~~~~~
1.பிறந்த ஊர்
~~~~~~~~~~~~~
  இந்திய தீபகற்பத்தின் கடைக்கோடியில் அமைந்திருந்த, அக்காலத்தில் சிறிய  நகரமாக இருந்த, ‘விருதுப்பட்டி’ எனும் ஊரே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த ஊராகும். அந்த விருதுப்பட்டியே இக்காலத்தில் ‘விருதுநகர்’ என்றழைக்கப்படுவதாகும்.

 
இக்காலத்தில் அந்நகரம், மாவட்டத் தலைநகராகவும், தனி வட்டமாக(தாலுக்காவாக)வும் விளங்கினாலும்
விருதுப்பட்டி  அந்நாளில் சாத்தூர் தாலுக்காவினுள் அமைந்த ஒன்றாய் இருந்தது.

2.மக்கள்தொகை
~~~~~~~~~~~~~~~~~
     விருதுப்பட்டியில் காமராஜர் அவர்கள் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னான மக்கள்தொகை 16,837 (1891ல் -14,075) மட்டுமே.

3.மருத்துவ வசதி
~~~~~~~~~~~~~~~~~~
  சராசரியாக இரண்டிலிருந்து ஐம்பத்தோருபேர் உள்நோயாளிகளாகவும்  சுமார் நூற்றிப்பதினைந்து பேர் புறநோயாளிகளாகவும் வரக்கூடிய அங்கிருந்த அரசு மருத்துவமனையானது ஆண்களுக்கென ஐந்து படுக்கைகளும்  பெண்களுக்கென ஐந்து படுக்கைகளையும் கொண்டதாக இருந்தது.

4.பொருளாதாரப் பிண்ணணி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    கி.பி.1912 மற்றும் 1913களில் காமராஜர் அவர்கள் பிறந்த நகரான விருதுப்பட்டி மட்டுல்லாது அதன் தாலுக்காவிலும் சேர்த்து வருடாந்திர வருமானம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை பெறும் நபர்களின் எண்ணிக்கை 126 மட்டுமே. வருடாந்திர வருமானம் ரூ.2000 வரை பெறும் நபர்களின் எண்ணிக்கை 105. ரூ.2000க்கு மேல் வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 137.
    ஆக, அக்காலத்தில் வருமான வரி செலுத்துவோராய் 368 பேர் மட்டுமே இருந்த பகுதியாகும் சாத்தூர் வட்டம். தலைக்கு ரூ0- 1அணா - 8பைசா விகிதமாக வருமான வரி இருந்தது.

(தொடரும்)

குறளும்
பெருந்தலைவரும் -
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருந்தலைவரது வாழ்வை அறியும்போது பொருத்தமாக நமக்கு விளங்கக்கூடிய திருக்குறள் :

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
-குறள்.
பொருள்-

     உயர் குணத்தை உடையவரா  சிறுமைக்  குணத்தை உடையவரா என  உரசிக் கண்டறிவதற்கு உரைக் கல்லாக இருப்பவை அவரவர் செய்யும் செயல்களே.

                                                                                                      
                               ****

No comments:

Post a Comment