Thursday 26 November 2015

இந்திய அரசியலமைப்புச் சட்டம்-முகவுரை-தமிழில் ( Preamble of Constitution of India in Tamil )


                                   இந்திய அரசியலமைப்புச் சட்டம் -முகவுரை-தமிழில்

“ இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஓரு இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியாட்சியாக கட்டமைக்க உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, மேலும், அதன் எல்லா குடிமக்களுக்கும்
·         சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி;
·         சிந்தனை உரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை கொள்ளும் உரிமை, விசுவாசிக்கும் உரிமை, மற்றும் வழிபடும் உரிமை,
·         தகுதி நிலை சமத்துவம் மற்றும் வாய்ப்பு சமத்துவம்
 
கிடைக்கவும்,
 
மேலும், அவர்கள் அனைவரிடையேயும் தனிநபர் கண்ணியத்தை 
உறுதிசெய்யும் சகோதரத்துவத்தையும் மற்றும் நாட்டின் ஒற்றுமையையும் 
ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கவும்

நம்முடைய அரசியல் நிர்ணய அவையில் 1949ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் இருபத்தியாறாம் நாளாகிய இன்று இந்த அரசியல் அமைப்பை இதன்மூலம் ஏற்று, சட்டமாக்கி, நமக்கே அளித்துக்கொள்கின்றோம்.


                                                           English version
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;


EQUALITY of status and of opportunity;


and to promote among them all


FRATERNITY assuring the dignity of the individual and the 
unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.